Thursday, December 29, 2011

எவரைத் திட்டி ஏசிப் பேசினீர்களோ, அவருக்காக ஓதும் துஆ!

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு துஆ ஓதியதை நான் கேட்டேன்.

اَللّهُمَّ فَأيٌما مُؤمِنٍ سبَبتهُ فَاجعَل ذَالِكَ لَهُ قُربَةٌ إلَيكَ يَوم القِيَامَةِ


”அல்லாஹும்ம பFஅய்யமா முஃமினின் ஸபப்தஹு பFஅஜ்அல் தாலிக லஹு குர்பதன் இலைக்க யவ்மல் கியாமா”

பொருள்: ’யா அல்லாஹ்! எந்த முஸ்லிமை நான் திட்டிப் பேசி விட்டேனோ அவருக்கு அந்த ஏச்சுப் பேச்சை மறுமை நாளில் உன் பக்கம் நெருங்கி வருவதற்கான சாதனமாக ஆக்குவாயாக.!’

ஆதார நூல்கள்: புகாரியின் விரிவுரை ஃபத்ஹுல்பாரி பாகம்-11 பக்கம்-171

முஸ்லிம் பாகம்-4 பக்கம்-2007.

முஸ்லிமில் இடம் பெற்றுள்ள வார்த்தை இதுவாகும்.

فَاجعَلحَا لَهُ زَكَاةً وٌَرَحمَةً
'பFஅஜ்அல்ஹா லஹு ஜகாதன் வ ரஹ்மா”

பொருள்: அதனைத் தூய்மைக்கும் கிருபைக்கும் உரிய சாதனமாக ஆக்குவாயாக!

No comments: