Monday, April 14, 2008

சையிதுல் இஸ்திஃபார்

اَللّهُمَّ أَنْتَ رَبِّي ، لاَ إِلهَ إِلاَّ أَنْتَ ، خَلَقْتَنِي ، وَأَنَا عَبْدُكَ ، وَأَنَا عَلىَ عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ ، أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ ، أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ ، وَأَبُوْءُ بِذَنْبِيْ ، فَاغْفِرْ لِيْ ، فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ .


(அல்லாஹும்ம அன்த ரப்பீ . லாஇலாஹ இல்லா அன்த . கலக்தனீ . வஅன அப்துக . வஅன அலா அஹ்திக வவஃதிக மஸ்த்ததஃது . அஊது பிக மின் ஷர்ரி மா ஸனஃது . அபூஉ லக பிநிஃமதிக அலய்ய . வஅபூஉ பிதன்பீ . ஃபக்ஃபிர்லீ . ஃபஇன்னஹு லா யக்பிருத் துனூப இல்லா அன்த.)


பொருள்:

அல்லாஹ்வே! நீயே என் இரட்சகன்! உன்னைத்தவிர உண்மையில் வணக்கத்திற்குரிய இறைவன் வேறில்லை. நீயே என்னைப் படைத்தாய்! நான் உனது அடிமை. நான் என்னால் இயன்ற அளவுக்கு உனது உடன்படிக்கையிலும் உனது வாக்குறுதியிலும் நிலைத்திருக்கிறேன். நான் செய்தவற்றின் கெடுதிகளை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். நீ எனக்களித்த அருட்கொடைகளை ஏற்றுக் கொள்கிறேன். எனது பாவத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். எனவே நீ என்னை மன்னித்தருள்வாயாக! ஏனெனில் உன்னைத் தவிர வேறு யாரும் பாவங்களை மன்னிப்பதில்லை.

இதன் சிறப்பு:

இதனை யார் மாலையில் ஓதி காலையாவதற்குள் மரணிக்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைவார். மேலும் யார் இதனை காலையில் ஓதி மாலையாவதற்குள் மரணிக்கிறாரோ அவரும் சுவர்க்கம் நுழைவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல்: புகாரி 6306)

No comments: