Friday, May 01, 2009

நபி(ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (37)

أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا لاَ أَعْلَمُ

பொருள்: யாஅல்லாஹ்! நான் அறிந்து கொண்டே உனக்கு இணைவைப்பதை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நான் அறியாமல் செய்தவற்றிற்காக உன்னிடம் பாவமன்னிப்பு கேட்கிறேன்.

أَللَّهُمَّ انْفَعْنِيْ بِمَا عَلَّمْتَنِيْ،وَعَلِّمْنِيْ مَا يَنْفَعُنِيْ وَزِدْنِيْ عِلْمًا

பொருள்: யாஅல்லாஹ்! எனக்கு நீ கற்றுக் கொடுத்தவற்றை எனக்கு பயனுள்ளதாக ஆக்கிவைப்பாயாக! எனக்கு பயனளிப்பவற்றையே கற்றுத் தருவாயாக! மேலும் என்னுடைய கல்வியை அதிகப்படுத்துவாயாக!

أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا طَـيِّـبًا،وَعَمَلاً مُتَقَبَّلاً

பொருள்: யாஅல்லாஹ்! பயனளிக்கும் கல்வியையும் தூய்மையான (ஹலாலான) உணவையும் ஏற்றுக்கொள்ளப்படும் நல்லறத்தையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்.

ஆதார நூற்கள்: ஸஹீஹ் அல் ஜாமிஃ, இப்னுமாஜா.

No comments: