Tuesday, February 08, 2011

நம்பிக்கைக் கொண்டவர்களுக்கான பாதுகாவல் கருவி!

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: எவர் பின்வரும் இந்த வார்த்தையை என்றாவது ஒருநாள் 100 தடவை ஓதினாரோ அவருக்கு அது. 10 அடிமைகளை விடுதலை அளித்ததற்குச் சமமாக அமையும்! மேலும் அவருக்கு அதன் மூலம் 10 நன்மைகள் எழுதப்படும்! 10 பாவங்கள் அழிக்கப்படும். மேலும் இந்த வார்த்தை மாலை நேரம் வரை - நாள் முழுவதும் பாதுகாப்பதற்கான கருவியாக அவருக்கு அமையும். மேலும் அவரது அமலை விடவும் சிறந்த அமலை செய்து கொண்டு எவரும் வர முடியாது. அவரை விடவும் அதிகமான அமல்களை செய்திருக்கும் மனிதரைத் தவிர!.

’லா இலாஹ இல்லல்லாஹு வஹதஹு லா ஷரீகலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்.’

ஆதார நூல்கள்: புகாரி பாகம் 4 பக்கம் 95. முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2071.

No comments: