Friday, April 16, 2010

குர்ஆன் - ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள துஆ மற்றும் திக்ர்கள் (1)

உச்சரிப்பு: ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வ லாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்

பொருள்: அல்லாஹ் தூய்மையானவன். மேலும் அனைத்துப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இறைவன் இல்லை. மேலும் அல்லாஹ் மாபெரியவன்.

உச்சரிப்பு: ஸுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி ஸுப்ஹானல்லாஹில் அழீம்

பொருள்: அல்லாஹ்வைப் புகழ்வதோடு அவனைத் துதிக்கவும் செய்கிறேன். மகத்துவம் மிக்க அல்லாஹ் தூய்மையானவன்.

உச்சரிப்பு: லா இலாஹ இல்லல்லாஹு வலா நஅஃபுது இல்லா இய்யாஹ். லஹுன் நிஅஃமது வலஹுல் Fபழ்லு வலஹுஸ் ஸனாவுல் ஹஸன், லா இலாஹ இல்லல்லாஹு முக்லிஸீன லஹுத்தீன வலவ் கரிஹல் காஃபிரூன்

பொருள்: அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை. அவன் ஒருவனையே நாங்கள் வணங்குகிறோம். அருட்கொடைகள் தந்தவன் அவனே. கிருபையும் அவனுக்குரியதே. மேலும் அழகிய தொடர் புகழும் அவனுக்கே! அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இறைவன் இல்லை. அவன் ஒருவனுக்கு மட்டுமே கீழ்ப்படிந்தவர்களாய் அவனை நாங்கள் வணங்குகிறோம்.

உச்சரிப்பு: லா ஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பில்லாஹ்

பொருள்: அல்லாஹ்வைக் கொண்டே தவிர எந்த ஆற்றலும் அதிகாரமும் இல்லை.

உச்சரிப்பு: ரப்பனா தகப்பல் மின்னா இன்ன(க்)க அன்(த்)தஸ் ஸமீஉல் அலீம் வ து(த்)ப் அலைனா இன்னக அன்தத் தவ்வாபுர் ரஹீம்

பொருள்: எங்கள் இரட்சகனே! எங்களிடம் இருந்து (இந்தப் பிரார்த்தனைகளை) ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீதான் எல்லாவற்றையும் செவியுறுபவனாகவும் நன்கு அறிபவனாகவும் இருக்கிறாய். மேலும் எங்கள் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ தான் பெரிதும் மன்னிப்பவனும் கருணை மிக்கவனும் ஆவாய்!

No comments: