Showing posts with label தீங்கு. Show all posts
Showing posts with label தீங்கு. Show all posts

Friday, April 17, 2009

நபி(ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (36)

أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ يِوْمِ السُّوْءِ، وَمِنْ لَيْلَةِ السُّوْءِ، وَمِنْ سَاعَةِ السُّوْءِ، وَمِنْ صَاحِبِ السُّوْءِ، وَمِنْ جَارِ السُّوْءِ فِيْ دَارِ الْمُقَامَةِ

பொருள்: யாஅல்லாஹ்! பகலில் ஏற்படும் தீங்கை விட்டும் இரவில் ஏற்படும் தீங்கை விட்டும் தீங்கு ஏற்படும் நேரத்தை விட்டும் தீய நண்பர்களை விட்டும் மற்றும் (நான்) வசிக்கும் இடத்தில் தீய அண்டை வீட்டாரை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْجَنَّةَ ، وَأَسْتَجِيْرُ بِكَ مِنَ النَّارِ

பொருள்: யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடம் சொர்க்கத்தை கேட்கிறேன். மேலும் நரகத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

أَللَّهُمَّ فَقِّهْنِيْ فِي الدِّيْنِ

பொருள்: இறைவா! எனக்கு மார்க்க விளக்கத்தைத் தருவாயாக!

ஆதார நூற்கள்: தப்ரானி, திர்மிதி, புகாரி, முஸ்லிம்.

Friday, November 21, 2008

நபி (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (19)

أَللَّهُمَّ إِنِّيْ أَعُـوْذُ بِكَ مِنْ شَرِّ سَمْـعِيْ، وَمِنْ شَرِّ بَصَرِيْ، وَمِنْ شَرِّ لِسَانِيْ، وَمِنْ شَرِّ قَلْـبِيْ، وَمِنْ شَرِّ مَنِـيِّـيْ

பொருள்: யாஅல்லாஹ்! என்னுடைய செவியின் தீங்கை விட்டும் பார்வையின் தீங்கை விட்டும் நாவின் தீங்கை விட்டும் உள்ளத்தின் தீங்கை விட்டும் எண்ணத்தின் தீங்கை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். (ஆதாரம்: திர்மிதி, அபூதாவூத்)