Showing posts with label அபிவிருத்தி. Show all posts
Showing posts with label அபிவிருத்தி. Show all posts

Friday, July 31, 2009

நபி(ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (48)

أَللَّهُمَّ جَنِّبْنِيْ مُنْكَرَاتِ اْلأَخْلاَقِ، وَاْلأَهْوَاءِ، وَاْلأَعْمَالِ وَاْلأَدْوَاءِ

பொருள்: யாஅல்லாஹ்! தீயகுணங்கள், தீயஆசைகள், தீயசெயல்கள், தீயநோய்கள் ஆகியவைகளிலிருந்து என்னை நீ காப்பாற்றுவாயாக!

أَللَّهُمَّ قَنِّعْنِيْ بِمَا رَزَقْتَنِيْ، وَبَارِكْ لِيْ فِيْهِ، وَاخْلُفْ عَلَيَّ كُلَّ غَائِبَةٍ لِّيْ بِخَيْرٍ

பொருள்: யாஅல்லாஹ்! நீ எனக்கு அளித்த ரிஸ்கை -அருட் கொடைகளை- எனக்கு போதுமானதாக்கி, அதில் எனக்கு அபிவிருத்தியும் செய்வாயாக! என்னை விட்டும் நீங்கிவிடும் -அருட்கொடைகளுக்கு- பகரமாக அதைவிட சிறந்தவற்றை எனக்குத் தருவாயாக!

أَللَّهُمَّ حَاسِبْنِيْ حِسَابًا يَسِيْرًا

பொருள்: யாஅல்லாஹ்! என்னை (மறுமையில்) மிகவும் எளிதாக விசாரணை செய்வாயாக!

ஆதார நூற்கள்: ஹாகிம், திர்மிதி.

Friday, March 13, 2009

நபி(ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (31)

أَللَّهُمَّ اجْعَلْ أَوْسَعَ رِزْقِكَ عَلَيَّ عِنْدَ كِبَرِ سِنِّيْ، وَانْقِطَاعِ عُمُرِيْ

பொருள்: யாஅல்லாஹ்! எனது முதுமைப் பருவத்திலும் எனது ஆயுள் முடியும் நிலையிலும் உன்னுடைய அருட் கொடைகளை (ரிஸ்கை) எனக்கு விசாலப்படுத்துவாயாக!

أَللَّهُمَّ اغْفِرْ لِيْ ذَنْبِيْ، وَوَسِّعْ لِيْ فِيْ دَارِيْ،وَبَارِكْ لِيْ فِيْ رِزْقِيْ

பொருள்: யாஅல்லாஹ்! என்னுடைய பாவத்தை மன்னிப்பாயாக! என்னுடைய வீட்டை விசாலமாக்குவாயாக! என்னுடைய உணவில் அபிவிருத்தி செய்வாயாக!

اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ،وَرَحْمَتِكَ فَإِنَّهُ لاَ يَمْلِكُهَا إِلاَّ أَنْتَ

பொருள்: யாஅல்லாஹ்! உன்னுடைய தயாளத் தன்மையிலிருந்தும் உன்னுடைய அருளிலிருந்தும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். ஏனெனில் இவைகளை உன்னைத் தவிர வேறு எவரும் சொந்தம் கொள்ள முடியாது.

ஆதார நூற்கள்: ஹாகிம், அஹ்மத், தப்ரானி.

Sunday, October 12, 2008

நபி (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள் (11)

أَللَّهُمَّ أَكْثِرْ مَالِيْ وَوَلَدِيْ ، وَبَارِكْ لِيْ فِيْمَا أَعْطَيْتَنِيْ

பொருள்: யாஅல்லாஹ்! எனக்கு செல்வத்தையும் சந்ததியையும் அதிகப்படுத்துவாயாக! மேலும் எனக்கு நீ கொடுத்தவற்றில் அபிவிருத்தி செய்வாயாக!

ஆதார நூல்: புகாரி