Tuesday, December 28, 2010

உலகத்தையும், மறுமையையும் ஒன்றிணைக்கும் துஆ!

தாரிக் அல் அஷ்ஜயீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'புதிதாக ஒருவர் இஸ்லாத்தை ஏற்றால் அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகையை கற்றுக் கொடுப்பார்கள். பிறகு பின்வரும் இந்தக் கலிமாக்களை ஓதி துஆச் செய்யுமாறு அவரைப் பணிப்பார்கள்.'

அல்லாஹும்ம ஃபி(F)ர்ளீ, வர்ஹம்னீ, வஹ்தினீ, வஆபி(F)னீ, வர்ஜுக்னீ.

பொருள்: யா அல்லாஹ்! என்னை மன்னித்து விடு; எனக்குக் கருணை செய்; எனக்கு வழிகாட்டு; எனக்கு ஆரோக்கியம் அளித்திடு; மேலும் எனக்கு உணவு வழங்கு!.'

ஆதார நூல்: முஸ்லிம் பாகம் 4 பக்கம் 2073. முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் 'திண்ணமாக இந்த வார்த்தைகள் உனது உலகத்தையும், உனது மறுமையையும் ஒன்றிணைக்கும் என்று வந்துள்ளது.'

No comments: